"மூலிகைச் செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்"


கோவை, நவம்பர் 6: தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 



 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

"தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை செடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வறட்சி காரணமாக தமிழகத்தில் அழிந்து வந்த பல மூலிகை செடிகள் தற்போதைய பருவ மழை காரணமாக துளிர் விட்டு வரும் இந்நிலையில் அவற்றை முறையாக பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். 

மேலும், தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க 'தனி குழு' ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டும்". 

முன்னதாக, மூலிகை செடிகளை ஏந்தியவாறு விவசாயி சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...